உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை சிப்காட்டில் டிசிசி குரோமிய கழிவுகள் அகற்றுவது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏஆய்வு செய்த போது எடுத்த படம்.

ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமிய கழிவுகள் அகற்றுவது குறித்து சட்ட பேரவை மனுக்கள் குழு ஆய்வு

Published On 2022-09-06 14:45 IST   |   Update On 2022-09-06 14:45:00 IST
  • 1995ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது
  • அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு குரோமியம் தொழிற்ச்சாலை இயங்கியது.

இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது.

சுமார் 27 ஆண்டுகளாக தொழிற்சாலை வளாகத்தில் குரோமியக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு இன்று ஆய்வு செய்தனர்.இந்த ஆய்விற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

இந்த ஆய்வில் குரோமிய கழிவுகள் அகற்றுவது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ, செங்கம் கிரி எம்.எல்.ஏ, விருக்கம்பாக்கம் பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ மற்றும் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News