- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் இந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினர்.
மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணி வழக்கறிஞர் அமைப்பின் மாநில செயலாளர் ரத்தினகுமார் வரவேற்று பேசினார்.
வேலூர் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயபிரகாஷ் ,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் வரவேற்பு குழு வக்கீல்கள் குணசேகர், குமார், தியாகராஜன், சுரேஷ், இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ்,ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.