உள்ளூர் செய்திகள்

ஆற்காட்டில் வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்த மகனும் சாவு

Published On 2023-01-17 14:52 IST   |   Update On 2023-01-17 14:52:00 IST
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காடு கிளைவ்பஜார் பகுதி நரிக்குறவர் இனத்தைச்சேர்ந்த வர் முருகன் (வயது 42). இவ ரது மகன் பகவதி (21). இவர்கள் கடந்த 12-ந் தேதி பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட் டில்நாட்டுவெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கள் தயாரித்த நாட்டு வெடி குண்டு வெடித்து விபத்து ஏற் பட்டது.

இதில் முருகன் சம் பவ இடத்திலேயே உயிரிழந் தார். பகவதி படுகாயம் அடைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு பகவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந் தார். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News