உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

Published On 2022-09-04 14:00 IST   |   Update On 2022-09-04 14:00:00 IST
  • மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் மனைவி திட்டியதால் விரக்தி
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வடகண்டிகை பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் மகன் பார்த்திபன் (51) விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பார்த்திபனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பார்த்திபன் அங்கிருந்து சென்று விவசாய நிலத்தில் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார்.

பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்கடர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News