உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
நெமிலி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை
- ஏரி, கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் கடப்பாக்கம் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதிகுள்ளாயினர்.
நள்ளிரவு பலத்த மலை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் கால்வாய்கள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.