உள்ளூர் செய்திகள்
கைத்தறி நெசவாளர்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டம்
- விசைத்தறியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்
- தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்தது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இவர்கள் கைத்தறிக்காக ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் நெய்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விசைத்தறியில் நெய்வதை தடைசெய்யவேண்டும், கைத்தறிச்சட்டம் 1985-ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.