- குடும்ப தகராறு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வந்து ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சர்ச் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வசித்து வந்தார்.
தன்ராஜ் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் தன்ராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி அக்ராவரம் அருகே மூடப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.