உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்து காயமடைந்தவர் சாவு

Published On 2022-11-02 09:30 GMT   |   Update On 2022-11-02 09:30 GMT
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடிபகுதியில் கடந்த 25-ந் தேதி பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணாபாடியை சேர்ந்த கோபி (வயது 46) மற்றும் அவரது மனைவி தீபா (40) ஆகியோர் தீக்காயம் அடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு தொடர்பாக ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News