உள்ளூர் செய்திகள்

பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

Published On 2023-06-14 14:27 IST   |   Update On 2023-06-14 14:27:00 IST
  • தாசில்தார் பார்வையிட்டார்
  • வீட்டு பராமரிப்பு பணிக்காக சுவரை இடித்த போது கிடைத்து

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் சீனிவாச ஐயர்(48). இவர் வீட்டு பராமரிப்பு பணிக்காக சுவரை இடித்த போது 18 ஆம் நூற்றாண்டை சார்ந்த 17 அரியவகை நாணயங்கள் கிடைத்தது.

இதுகுறித்து நெமிலி தாசில்தார் பாலசந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தாசில்தார் அரியவகை நாணயங்களை பார்வையிட்டார். பின்னர் இதனை மீட்டு தற்போது நெமிலி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிகழ்வின் போது வருவாய் ஆய்வாளர் கனிமொழி,கிராம நிர்வாக அலுவலர்கள் ரகு, இளவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News