உள்ளூர் செய்திகள்

மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-22 09:31 GMT   |   Update On 2023-11-22 09:31 GMT
  • குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
  • 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News