உள்ளூர் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. மகன் முனுசாமி (வயது 45). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நோயின் தீவிர தாக்கத்தால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.