உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-07-07 16:14 IST   |   Update On 2022-07-07 16:14:00 IST
  • படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வீராணம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 60) இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனிரத்திரனம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முனிரத்தினம் மகன் விஜயகாந்த் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News