உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணி நேர்காணல்

Published On 2023-10-04 13:52 IST   |   Update On 2023-10-04 13:52:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
  • நாளை நடக்கிறது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வின் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞரணி அமைப்பிற்கு விண்ணபித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நாளை காலை 8 மணிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில்நேர்காணல் நடைபெற உள்ளது.

எனவே ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ண ப்பித்த அனைவரும் தங்களது ஆதார் கார்டு, வயது சான்றிதழ்,கட்சி இளைஞர் அணி உறுப்பினர் கார்டு, தாங்கள் இதுவரை இளைஞர் அணியில் செயலாற்றிய தகவல்க ளுடன் நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News