உள்ளூர் செய்திகள்

சபரிமலைக்கு பேரிடர் மீட்பு படை விரைவு

Published On 2022-11-15 15:33 IST   |   Update On 2022-11-15 15:33:00 IST
  • அரக்கோணத்தில் இருந்து 2 குழுவினர் சென்றனர்
  • 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது

அரக்கோணம்:

பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப் பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைத்தளம் உள்ளது. இங்கி ருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேர ளம், ஆந்திரம் மற்றும் புதுவை, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்க ளில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், முன்னெச்சரிக்கைப் பணிக் காகவும் அந்தந்த மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேசிய பேரி டர் மீட்புப் படையினர் அந்தப் பகுதிகளுக்குச் செல்வர்.

இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 20-ஆம் தேதி வரை மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்க ளில்இருந்துலட்சக்கணக்கான பக் தர்கள் இருமுடி கட்டிச்செல்வர்.

இதற்காக, சபரிமலையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை யினரை அனுப்புமாறு கேரள அரசு, அரக்கோணம் தேசிய பேரி- டர் மீட்புப் படைத்தளத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது.

இதையடுத்து, படைப் பிரிவின் கமாண்டண்ட் அருண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் சுரேஷ் தலை மையில், தலா 15 பேர் கொண்ட இரு குழுவினர் திங்கள்கிழமை சாலை மார்க்கமாக கேரள மாநி லம், பத்தனம்திட்டா மாவட்டம், பம்பைக்கு புறப்பட்டுச் சென்ற னர். இவர்களில் ஒரு குழு பம்பை யிலும், மற்றொரு குழு சபரிமலை யிலும் முகாமிட உள்ளனர்.

இவர்கள், பேரிடர் மீட்புக் கான அதிநவீன உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், முதலுதவி சிகிச்சைக்கான மருத் துவ உபகரணங்கள், பாதுகாப்புக் கான உபகரணங்களுடன் புறப்பட் டுச் சென்றுள்ளனர்.

மேலும், கேரள அரசு மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வா கத்துடன் தொடர்ந்து தொலைத் தொடர்பில் இருப்பதற்காக, அரக் கோணம் படைத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது.

தேவைப்பட்டால் கூடுதலாக படை வீரர்கள் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News