உள்ளூர் செய்திகள்

பேரிடர் கால ஒத்திகை

Published On 2022-09-01 15:02 IST   |   Update On 2022-09-01 15:02:00 IST
  • சோளிங்கர் தக்கான் குளத்தில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தக்கான்குளத்தில் வெள்ள பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் என வெள்ள பேரிடர் கால ஒத்திகை செய்தனர்.

அப்போது தாசில்தார் கணேசன் பொதுப்பணித்துறை அலுவலர் சேரலாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கிராம நிர்வாக உதவியாளர் ஆதிகேசவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News