உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் 850 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-07-24 14:34 IST   |   Update On 2022-07-24 14:34:00 IST
  • 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது

ராணிப்பேட்டை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 850 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags:    

Similar News