உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் அறவழிப்போராட்டம்

Published On 2022-07-27 16:18 IST   |   Update On 2022-07-27 16:18:00 IST
  • அமலாக்க துறையை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமலாக்க துறையை கண்டித்து சத்யாகிரக அறவழிப்போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.நகர தலைவர் வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் இருந்து சோனியா காந்தியை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும்,மத்திய அரசை கண்டித்தும்,மத்திய அமலாக்கதுறையை கண்டித்தும் அமைதி வழி சத்யா கிரக போராட்டம் நடந்தது.

இந்த சத்யாகிரக போராட்டத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் பியாரேஜான், வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், எஸ்சி., எஸ்டி மாவட்டத் தலைவர் நாகேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம் மாவட்ட துணைத் தலைவர் மோகன் மனித உரிமை மாவட்ட தலைவர் ஜானகிராமன் பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்டத் தலைவர் குப்புசாமி ராணிப்பேட்டை நிர்வாகிகள் முருகன் மோகனசுப்பிரமணியம் பஞ்சாயத்து ராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலச்சந்தர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நியாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News