உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்த ரேசன் அரிசி.

ெரயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-08-10 14:35 IST   |   Update On 2022-08-10 14:35:00 IST
  • 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பே ட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கபுரம் ெரயில்வே நிலையத்தில் ரேசன் அரிசி கடத்த ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் ெரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு படை உதவி ஆய்வாளர் கேமன் குமா ர தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பிளாட்பாரம் அருகே முட்புதரில் 22 அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

பின்னர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News