உள்ளூர் செய்திகள்

ஆட்டுப்பண்ணையில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-13 12:41 IST   |   Update On 2023-05-13 12:41:00 IST
  • விவசாயிகள் வளர்ப்பதற்கு 2 ஆடுகள் வழங்கப்படும்
  • அதிகாரி தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆட்டுப்பண்ணை மற்றும் அரசு கால்நடை ஆய்வாளர்கள் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

40 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணையில் 377 ஆடுகளும், 10 ஏக்கர் பரப்பளவில் தீவனமும் வளர்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆட்டு ப்பண்ணையில் ஆய்வு செய்து பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளை பார்வையிட்டார்.

ஆடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது ஆட்டுபண்ணை உதவி இயக்குனர் ஸ்ரீதர் பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆட்டு பண்ணையில் விவசாயிகள் வளர்ப்பதற்கு ஆடுகள் தேவைப்பட்டால் உரிய ஆவணங்களுடன் வந்து எடைக்கு ஏற்றார் போல், உரிய விலைக்கு 2 ஆடுகள் வழங்கப்படு வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News