உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த காட்சி.

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-07-14 15:25 IST   |   Update On 2023-07-14 15:25:00 IST
  • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
  • அதிகாரிகள் உடன் இருந்தனர்

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சின்ன தகரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் புனரமைக்கப்பட்டுள்ள சமையற்கூடம், புதிய துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையற்கூடம், ஆசிரியர்களுக்கான கழிவறை கட்டிடம், நியாய விலைக் கடை கட்டிடம், நெற்களம், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவை உள்பட மோட்டூர், படியம்பாக்கம், எடையந்தாங்கல், சுமைதாங்கி , கடப்பேரி ஆகிய ஊராட்சிகளில் மொத்தம் ரூ.1கோடியே 31லட்சம் மதிப்பில் 12 வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சிஅலுவலகங்கள், நாற்றாங்கால் பண்ணை ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சிவப்பிரகாசம், ஒன்றிய பொறியாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News