உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-11-25 07:02 GMT   |   Update On 2023-11-25 07:02 GMT
  • தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விளக்கம்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

வாலாஜா நகராட்சி அலுவ லக கூட்ட அரங்கில் குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார் பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.

நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திரும ணம், குழந்தை கடத்தல், குழந் தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும், இது போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, நக ராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன், குழந்தை வளர்ச்சிதிட்ட அலு வலர் அம்ச பிரியா, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் சதீஷ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் நாகப்பன் பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News