உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் மீன்பிடிக்கும் போராட்டம்
- நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து நடந்தது
- வருடம் முழுவதும் தேங்கி நிற்பதாக புகார்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாத ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய நடை மேடைகளிலிருந்து வரும் கழிவுநீர் மட்டுமின்றி மழை காலங்களில் வரும் மழை நீரும் சேர்ந்து வருடம் முழுவதும் தேங்கி நிற்பதை கண்டித்து கோஷமிட்டனர்.