உள்ளூர் செய்திகள்

கபடி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-12-07 14:56 IST   |   Update On 2022-12-07 14:56:00 IST
  • கலெக்டர் தகவல்
  • விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி மையம் அமைக் கப்படவுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர் கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் தலா 30 ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். பயிற்றுநர் 11 மாதங்கள் மட்டும் பணிபுரிய வேண்டும். மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதியுடைய விண்ணப்ப தாரர்கள் ஆண்கள், பெண்கள் விடுதி, நேருநகர், சத்து வாச்சாரி வேலூர் மாவட்டம் 632 009 என்ற முகவரிக்கு சென்று 10-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017-03462 6760TM தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News