உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு
ஆற்காடு நகர அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் ஜிம்.சங்கர் தலைமையில் தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.இதில்
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.