உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் வாகனம் மோதி வாலிபர் பலி
- பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாபேட்டை அம்மூர் ரோடு செல்லும் சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப இறந்து கிடப்பதாக வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்து போன வாலிபர் வாலாஜா உலகலந்தர் தெருவை சேர்ந்த கார்த்தி (28) என்பதும் தனியார் பட்டாசு கடையில் கூலி வேலை செய்பவர் என தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.