- வேன் மோதியது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெகதீசன்(22) திருமணம் ஆகாதவர். இவர் தந்தைக்கு துணையாக கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜெகதீசன் சென்னசமுத்திரம் கிராமத்தில் இருந்து பைக்கில் ஆற்காடு நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
சென்னையிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு ஆற்காட்டை நோக்கி வேன் வந்தது.
ஜெகதீசன் சென்ற பைக் மீது வேன் மோதியது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.