உள்ளூர் செய்திகள்

வாலாஜா அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை காத்திருப்பு அறையில் மின்விசிறி பொருத்த வேண்டும்

Published On 2022-08-23 16:25 IST   |   Update On 2022-08-23 16:25:00 IST
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • காத்திருப்பவர்கள் அவதியடைவதாக புகார்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பல்வேறு நோயாளிகள், மகப்பேறு தாய்மார்கள் போன்ற நபர்களுக்கு உடன் வந்து இருப்பவர்கள் அறுவை சிகிச்சை பிரிவு முன்பு உள்ள காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும்.

அங்கு மின்விசிறி இல்லாததால் மருத்துவமனைக்கு வருபவர்கள்மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரக்கோரி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News