உள்ளூர் செய்திகள்

தன்வந்திரி பீடத்தில் 5 யாகங்கள்

Published On 2023-07-18 15:20 IST   |   Update On 2023-07-18 15:20:00 IST
  • ஆடி அமாவாசை முன்னிட்டு நடந்தது
  • வருகிற 26-ந் தேதி கருட ஜெயந்தி விழா நடக்கிறது

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதரசுவாமிகளின் அருளானைப்படி உலக நன்மைக்காகவும்,சகல கார்யங்களில் வெற்றி பெறவும் வேண்டி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மஹா யாகத்துடன் மஹா காளி யாகம், சூலினி துர்கா யாகம், வாராகி யாகம், திருஷ்டி துர்கா யாகம் என 5 யாகங்கள் நடைபெற்றது.

மிளகாய் வற்றல், கருங்காலி, புல்லுருவி, நவ சமித்துக்கள், கொப்பரைத் தேங்காய், நெல் பொரி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சௌபாக்ய திரவியங்கள், செந்நாயுருவி, கிராம்பு, வால் மிளகு, லவங்கம், போன்ற பல்வேறு திரவியங்களை கொண்டு நடத்தப்பட்ட யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கருட ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

கருட ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு மூல மந்திர ஹோமமும், நவ கலச திருமஞ்சன அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News