உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

30 பனை மரங்களை வெட்டி கடத்திய லாரி பறிமுதல்

Published On 2022-07-28 14:42 IST   |   Update On 2022-07-28 14:42:00 IST
  • 5 பேர் மீது வழக்கு பதிவு
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் ராசாபாளையம் பகுதியில் இருந்து 30 பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மனோன்மணி அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வெட்டிய 30 பனைமரத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பனை மரங்களை வெட்டிய 3 பேர் மற்றும் லாரி டிரைவர், உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News