உள்ளூர் செய்திகள்

கஞ்சாவுடன் 3 பேர் கைது

Published On 2023-05-13 13:24 IST   |   Update On 2023-05-13 13:24:00 IST
  • பைக் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

அப் போது ஒரே மோட்டார் சைக் கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந் தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 22), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த விஜய குமார் (21), மங்கமாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண் டன் (18) என்பது தெரியவந் தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற் றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News