உள்ளூர் செய்திகள்

சூதாடிய 2 பேர் கைது

Published On 2023-11-25 07:03 GMT   |   Update On 2023-11-25 07:03 GMT
  • ரோந்து பணியில் சிக்கினார்
  • போலீசார் கைது செய்து விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று பஜார் பகுதி, காந்தி ரோடு, ரெயில் நிலையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மணியக்கார தெருவில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த மூதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 46), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வனத்தையன் (40) என்பதும், சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News