உள்ளூர் செய்திகள்
2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து
- ஒருவர் பலி
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (வயது 42). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் புலி வலத்திலிருந்து சோளிங்கருக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோளிங்கர் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதியது. இதில் முரளி பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.45 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கொண்ட பாளையம் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.