உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2022-07-27 16:19 IST   |   Update On 2022-07-27 16:19:00 IST
  • இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
  • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.

ஆற்காடு:

ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் . கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 23 ) நிறைமாத கர்ப் பிணியாக இருந்தார்.

அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலட்சுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

காவனூரை அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் செல்லும் போது பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் ராஜ்குமார் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News