என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby in the ambulance"

    • இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.

    ஆற்காடு:

    ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் . கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 23 ) நிறைமாத கர்ப் பிணியாக இருந்தார்.

    அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலட்சுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

    காவனூரை அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் செல்லும் போது பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் ராஜ்குமார் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
    • இரவு திடீரென பிரசவவலி

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன், தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். அதையடுத்து அணைக்கட்டு பகுதியில் இருந்து 108 ஆம்புலன்சு ஒன்று அந்த கிராமத்துக்கு சென்றது.

    பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த ரோஜாவை ஆம்புலன்சில் ஏற்றி வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியில் அவருக்கு பிரசவவலி அதிகரித்தது. அதனால் வேறு வழியின்றி ரோஜாவிற்கு மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி பிரசவம் பார்த்தார்.

    ஆம்புலன்சில் வைத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×