உள்ளூர் செய்திகள்

வாலாஜா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் பெற்று தரப்படும்

Published On 2022-09-18 14:36 IST   |   Update On 2022-09-18 14:36:00 IST
  • வாலாஜாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது

வாலாஜா:

வாலாஜா பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பாமக சார்பில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடந்தது.ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளர் எம். கே. முரளி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ கே.எல். இளவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சாலை மறியலில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு இன்றைக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.இட ஒதுக்கீடு என்பதை ஒதுக்கிவிட்டு இடப்பங்கீடு என்று கூற வேண்டும்‌.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இட ஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுத்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.முதலமைச்சரிடம் இதுகுறித்து போனில் 15 நிமிடம் பேசினேன். எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்.முதலமைச்சர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வீரம் என்பது வன்னியர்களின் ரத்தத்திலே உள்ளது.இனி விவேகத்தோடு செயல்பட வேண்டும்.இந்த மாவட்டம் கருப்பு மாவட்டமாக வரைபடத்தில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வாணியம்பாடியில் இருந்து சைக்கிள் பேரணியாக 120 கி.மீ சைக்கிளில் பயணம் செய்தேன்.

போராட்ட குணம் என்னை விட்டு போகவில்லை.உலக அளவில் நாம் நடத்திய 7 நாள் சாலை மறியல் போராட்டம் போல் வேறு எதுவும் இதுவரை நடைபெற்றது இல்லை. இது தவிர அனைத்து மக்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

கோபமும், வீரமும் என்னை விட்டு அகலாது. வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதற்கு நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இன்றைக்கு பெற்று தந்து உள்ளோம். பெண் குழந்தைகளை

பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்.பெண் குழந்தைகளை பார்த்தாலே நீங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. இட ஒதுக்கீட்டில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் பேசினர்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் எஸ்.பி. சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் ராஜா, மாநில சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் வக்கீல் சக்கரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல், வக்கீல் ஜானகிராமன், பகவான் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் சபரி கிரிசன், வாலாஜா மத்திய ஒன்றிய தலைவர் குமார், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார், வாலாஜா நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆத்திம் பாஷா, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளரும், செங்காடு ஊராட்சி மன்ற தலைவருமான தேவேந்திரன், வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆற்காடு வன்னியர் சங்க தலைவர் லட்சுமணன் மாவட்ட அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன்.

வன்னியர் சங்க வாலாஜா நகர செயலாளர் ஜானகிராமன், இளைஞர் அணி பிரபாகரன், வன்னியர் சங்க ஆற்காடு நகர செயலாளர் வி பிரபாகரன், வாலாஜா மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா நகர செயலாளர் ஞானசேகரன் நன்றி கூறினார். முன்னதாக ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News