உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்த காட்சி.

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-10-14 10:10 GMT   |   Update On 2022-10-14 10:10 GMT
  • பிளாட்பாரத்தில் பதுக்கி வைத்திருந்தனர்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதில் கர்நாடகா மாநிலத்திற்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1 டன் ரேசன் அரிசியை கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக பிளாட்பாரத்தில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தனர். இதனை ரெயில்வே போலீஸ் பறிமுதல் செய்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்து பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News