உள்ளூர் செய்திகள்

ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து பெண் பலி

Published On 2023-05-21 08:51 GMT   |   Update On 2023-05-21 08:51 GMT
  • ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து பெண் பலியானார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலூகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி (40). இவர் தனது மகன் இளைய பாரதியுடன் இருசக்கர வாகனத்தில் கமுதி சென்றார். வாகனத்தை இளையபாரதி வேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிங்கபுளியபட்டி அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து ராமலெட்சுமி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ராமலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமலெட்சுமியின் மூத்த மகன் ஆனந்த்பிரபு கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்துல் வஹா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News