உள்ளூர் செய்திகள்

வைகாசி பொங்கல் விழா

Published On 2023-06-11 14:10 IST   |   Update On 2023-06-11 14:10:00 IST
  • கமுதியில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
  • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பசும்பொன்

கமுதியில் உள்ள வளையக்கம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தலைசுமையாக பூஜை பெட்டியை சுமந்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

மேலும் சாட்டையால் அடித்துக் கொண்டும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News