உள்ளூர் செய்திகள்

சூறைக்காற்றுக்கு முறிந்து விழுந்த மரம்.

சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்தது

Published On 2022-10-17 06:12 GMT   |   Update On 2022-10-17 06:12 GMT
  • ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்தது.
  • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகர்மன்ற தலைவர் கார்மேகத்தை பொதுமக்கள், வர்த்தகர்கள் பாராட்டினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் கவரயர் தெரு பகுதியில் நேற்று திடீர் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த மரம் முறிந்து விழுந்தது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவம் நடைபெ றவில்லை. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் நகர்மன்றத் தலைவர் கார்மேகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்க கேட்டு கொண்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று நகராட்சி ஊழியர்களை அழைத்து மரக்கிளைகள் அகற்ற நடவடிக்கை எடுத்தார். மரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்றனர்.

பொது மக்களின் தகவலைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகர்மன்ற தலைவர் கார்மேகத்தை பொதுமக்கள், வர்த்தகர்கள் பாராட்டினர்.

அதே போல் ராமநாதபுரம் ரோமன்சர்ச் எதிரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் போது காவிரிகூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு நேரில் சென்று பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் கார்மேகம் அதிகாரிகளை அழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News