உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றோர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்

Published On 2023-09-01 07:42 GMT   |   Update On 2023-09-01 07:42 GMT
  • ஆதரவற்றோர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
  • அவர்க ளுக்கு போதிய வசதி ஏற்படுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் பெரும்பாலும் பஸ் நிலையங்கள், கோவில், சுற்றுலா தலங்களுக்கு அருகே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், ஆதவற்ற முதியோர்கள் என பலர் சுற்றித் திரிகின்றனர். இவற் றில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்பட்ட வர்கவே இருக்கிறார்கள். குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் பகுதிகளில் அதிகம் இவர் களை பார்க்க முடிகிறது.

துணிகளை மூட்டைக ளாக கட்டிக்கொண்டும், கால்களில் புண்களோடும், காயங்களோடும் நடக்க முடி யாமல் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டி ருக்கின்ற னர். சிலர் அவர்கள் மீது கற்களை எறிவது, வம்பிழுப் பது என அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரிதாபப் பட்டு யாரேனும் இவர்க–ளுக்கு உணவு அளித்தால் தான் உண்டு. இல்லையேல் பட்டினிதான். அதை அவர்க–ளுக்கு சொல்லவும் தெரிய–வில்லை.

இவர்களை அதிகாரிகள் கண்காணித்து முறையான மருத்துவம் அளித்து காப்ப–கங்களில் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் பொறுப் புணர்ந்து செயல்பட வேண் டும். இதுபோன்று இருப்ப வர்களை துன்புறுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல் சுற்றித்திரிவோர் அதிகம். மாவட்டம் தோறும் அரசு காப்பகங்கள் அதிகப்படுத்த வேண்டும். இதோடு அவர்களுக்கு போதிய வசதி ஏற்ப டுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News