உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஜவாஹிருல்லா பேசிய காட்சி.

பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்-ம.ம.க.

Published On 2023-08-07 13:53 IST   |   Update On 2023-08-07 13:53:00 IST
  • பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ம.ம.க. கூறியது.
  • பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை.

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, செந்தில்வேல், வக்கீல் மதிவதனி ஆகியோர் பேசி னர்.

பொதுகூட்டத்தில் தமிழக அரசு நிலத்தின் வழி காட்டி மதிப்பினை கடுமை யாக உயர்த்தி உள்ளது.அதை குறைக்க நடவடிக்கை வேண்டும்.நெடுந்தொலை வில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அதிகப்படி யான டோல் கட்டணம் செலுத்துவதால் வணிகர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு குறு தொழில் நிறுவ னங்கள் மீது மறைமுகமாக மின்சார கட்டணச்சுமை ஏற்றப்பட்டுள்ளதால் நலி வடைந்த நிலையில் உள்ளது.மின்சார கட்டணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை. அந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News