- வழுதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.
- பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகை அபிேஷக, ஆராதனை நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வழுதுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி வழுதூர் அருளொளி நகர், ரெயில்வே கேட் உள்ளிட்ட தெருக்களில் முத்து எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
5-ம் நாளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகை அபிேஷக, ஆராதனை நடந்தது.
இரவில் முளைக்கொட்டு, ஒயிலாட்டம், ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு, கும்மிப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு மாரியம்மன் கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பா ரிகளை ஆண்கள், பெ ண்கள் சுமந்து வழுதூர் கிராமத்தை சுற்றி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதையடுத்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க கரகத்துடன் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்தனர்.
உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடந்த ஆடிப்பூர முளைக்கொட்டு உற்சவ விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.