உள்ளூர் செய்திகள்
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை
- திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் முத்து சரவணன் (வயது 36). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
முத்து சரவணன் தனக்கு வயதாகி விட்ட நிலையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை என்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததுள்ளார். அவருக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. இதைத்தொடர்ந்து பெற்றோரிடம் எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து வையுங்கள், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வந்தார்.
இந்நிலையில் முத்துசரவணன் வீட்டின் தாழ்வாரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.