உள்ளூர் செய்திகள்
- ராமநாதபுரம் நகா் பகுதியில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.
- கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் சாரல் மழை அவ்வப்போது மழை பெய்து வந்து, வெப்பம் தணிந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் நகா் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.
இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதே போல் பனைக்குளம், வழுதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்டநேரம் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.