தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்
- தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர் வலியுறுத்தினார்.
- 7-ம் வகுப்பு மாணவி ம.அபிநயாஸ்ரீ நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள கொடிப்பங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
பள்ளித் தலைமை யாசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவன் செங்கதிர் செல்வன் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும் தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் நீண்ட கடல் பகுதி உள்ளதால் இயற்கை துறை முகங்களும் உப்பங்கழி களும் நிறைந்து உள்ளது. இங்கு, ரோமானியர், யூதர், சீனர் உள்ளிட்ட வெளி நாட்டு வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர். அஞ்சு வண்ணம் எனும் இஸ்லா மியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்ட தானம் கோயில் மண்டபத்தை பராமரித்தாக கல்வெட்டு செய்தி உள்ளது. ஆனால் இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்து சேதமடைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி முழு வீச்சில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தொல்லியலை பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்டு, உள்ளூரில் உள்ள தொல்லியல் தட யங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றளிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.7-ம் வகுப்பு மாணவி ம.அபிநயாஸ்ரீ நன்றி கூறினார்.