உள்ளூர் செய்திகள்

வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதி

Published On 2023-08-03 06:35 GMT   |   Update On 2023-08-03 06:35 GMT
  • கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
  • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்

100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News