உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. பொதுக்குழு கூட்டம்

Published On 2023-03-24 08:21 GMT   |   Update On 2023-03-24 08:21 GMT
  • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
  • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News