உள்ளூர் செய்திகள்
- விருதுநகர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கிடாத்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகள் புவிதாரணி (வயது 16). இவரது தாய் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், கிழவன் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை திருப்பி கொடுக்காததால் 2 பேரும் புவிதாரணி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனை புவிதாரணி தடுக்க முன்றதால் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் கையில் காயம் அடைந்த புவிதாரணி பேரையூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.