உள்ளூர் செய்திகள்
- தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.