துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.